அண்மைய செய்திகள்

recent
-

230 பேர் பலி....டெங்கினால் இலங்கையில்....


நாடு முழுவதும் டெங்கு நோய் தொடர்ந்தும் வேகமாக பரவி வருவதாகவும் தற்பொழுது வரை இந்த நோயினால் 230 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த ஆறு மாத காலப்பகுதியில் நாட்டில் பல பாகங்களிலும் 80 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப் பட்டுள்ளனர். வரலாற்றில் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளது இதுவே முதல் தடவையாகும்.

கொழும்பு, கம்பஹா, களுத்தறை, மாத்தறை, கண்டி, கேகாலை, புத்தளம் போன்ற மாவட்டங்களில் இந்த டெங்கு நோய் பரவும் வீதம் அதி கமாக காணப்படுவதாகவும் சுகாதாரப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

230 பேர் பலி....டெங்கினால் இலங்கையில்.... Reviewed by Author on July 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.