கிளிநொச்சியில் பல கிராமங்கள் உவர் நீராக மாறும் அபாயம்...
கிளிநொச்சியில் உள்ள பூநகரி பகுதியில் பல கிராமங்கள் உவர் நீர் தாக்கத்துக்கு உட்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தற்போது ஆணைவிழுந்தான், வன்னேரிக்குளம் போன்ற கிராமங்கள் முழுமையாகவே உவர் நீர் பிரச்சினையை எதிர்நோக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த மாவட்டம் உவர் நீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது. ஆகவே அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு ஒரு நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் பல கிராமங்கள் உவர் நீராக மாறும் அபாயம்...
Reviewed by Author
on
July 06, 2017
Rating:

No comments:
Post a Comment