மன்னார் தீவில் மலேரியா நுளம்பின் தாக்கத்தினால் சுமார் 75 ஆயிரம் பேர் வரை
மன்னார் தீவில் மலேரியா நுளம்பின் தாக்கத்தினால் சுமார் 75 ஆயிரம் பேர் வரை நேரடியாக பாதிப்புக்கு உள்ளாகுவதோடு, இலங்கையில் உள்ள மக்கள் அனைவருமே மறைமுகமாக மலேரியா தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய சந்தர்ப்பம் மிக மிக அதிகமாக உள்ளது என மலேரியா நோய் தடுப்பு பிரிவின் மன்னார் மாவட்ட பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் கே.அரவிந்தன் தெரிவித்தார்.
-மன்னார் மாவட்டத்தில் மலேரியா நுளம்பின் தாக்கம் மற்றும் அதன் பரவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,
இலங்கையில் மலேரியா நோயின் தாக்கம் பரவும் சந்தர்ப்பம் காணப்பட்டுள்ள போதும்,மன்னார் மாவட்டத்தில் அண்மையில் மலேரியா நோயை பரப்பும் 'அனாஅக் பிலிஸ் ஸ்டீபென்சி' என்ற புதிய வகை காவி நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.
மன்னாரில் குறிப்பாக கடற்கரையோர பிரதேசங்களான தலைமன்னார், பேசாலை,முருகன் கோவில், உதயபுரம்,எழுத்தூர்,புதுக்குடியிருப்பு,சிறுத்தோப்பு, வங்காலைப்பாடு, மற்றும் நடுக்குடா போன்ற கிராமங்களில் பயன்படுத்தப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற கிணறுகள் மற்றும் நீர் தொட்டிகள் போன்ற வற்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
-குறித்த நுளம்பு இந்தியாவில் இருந்து டோலர் படகுகள் மூலம் இலங்கைக்குள் உற்பிரவேசித்திருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கின்றோம்.
-இந்த நிலையில் மலேரியா தடை இயக்கமானது குறித்த பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு தொடர்ச்சியாக விழிர்ப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதோடு,குறித்த பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட கிணறுகளில் மலேரியா குடம்பிகளை அழிக்கும் வகையில் கிணறுகளினுள் மீன் வகைகளையும், இரசாயன பதார்த்தங்களையும் இட்டு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
மலேரியா நுளம்பின் பெருக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் எம் மத்தியில் காணப்படுகின்றது. எனவே மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாக காணப்படுகின்றது.
மன்னார் தீவில் மலேரியா நுளம்பின் தாக்கத்தினால் சுமார் 75 ஆயிரம் பேர் வரை நேரடியாக பாதிப்புக்கு உள்ளாகுவதோடு, இலங்கையில் உள்ள மக்கள் அனைவருமே மறைமுகமாக மலேரியா தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய சந்தர்ப்பம் மிக மிக அதிகமாக உள்ளது.
எனவே மக்களின் பூரண ஒத்துழைப்பும்,குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் அரச,அரச சார்பற்ற மற்றும் மக்களின் ஒத்துழைப்பும் அதிகமாக காணப்படுவதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவின் மன்னார் மாவட்ட பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் கே.அரவிந்தன் மேலும் தெரிவித்தார்.
மன்னார் தீவில் மலேரியா நுளம்பின் தாக்கத்தினால் சுமார் 75 ஆயிரம் பேர் வரை
Reviewed by NEWMANNAR
on
August 29, 2017
Rating:
No comments:
Post a Comment