காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை சந்தித்த வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களுடைய உறவினர்கள் 170ஆவது நாளாகவும் இன்று போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் போராட்டக்காரர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும், அதற்கான போராட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தார்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை இழந்து ஐந்து மாதங்களைக் கடந்து போராடி வரும் நிலையிலும் இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை சந்தித்த வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்
Reviewed by Author
on
August 12, 2017
Rating:

No comments:
Post a Comment