இலங்கை திரும்பும் அகதிகளுக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படும் கப்பல் சேவை!
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மீண்டும் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு தமிழ்நாடு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதன்படி கொழும்பு - தூத்துக்குடிக்கு இடையில் இருந்து வந்த கப்பல் சேவையானது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் குறித்த கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்ப வேண்டுமாயின் அவர்களுக்கு வசதியாகவே இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு தமிழ்நாடு அரசாங்கம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், தூத்துக்குடி - கொழும்பு கப்பல் சேவையா அல்லது இராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் சேவையா அகதிகள் விரும்புகிறார்கள் என்று தீர்மானிப்பதற்கு முன்னர் மத்திய அரசுடன் கலந்துரையாட வேண்டியுள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்திலிருந்து இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை திரும்பும் அகதிகளுக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படும் கப்பல் சேவை!
Reviewed by Author
on
August 17, 2017
Rating:

No comments:
Post a Comment