அண்மைய செய்திகள்

recent
-

குத்துச்சண்டை வீரர்களால் வடமாகாணத்திற்கு 20 பதக்கங்கள்


மாத்தறை மாவட்டத்தில் இம் மாதம் 21ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை நடைபெற்ற 43வது தேசிய விளையாட்டு விழாவில், அக்குரச கம்புரபிட்டியவில் இடம் பெற்ற தேசிய குத்து சண்டை போட்டியில் வடமாகாண அணியினர் 6 வெண்கலப் பதக்கங்களை பெற்று கொண்டனர்.

வி. நிக்களஸ் 69 கிலோகிராம் நிறை பிரிவில் வெள்ளி பதக்கத்தையும், என்.செந்தூரன் 56 கிலோகிராம் நிறை பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும், ஆர். ரமேஷ் 75 கிலோகிராம் நிறை பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும்,
எஸ். கேசவன் 81 கிலோகிராம் நிறை பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும், எம். நிக்சன் ரூபராஜ் 91 கிலோ கிராம் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும், பெண்கள் பிரிவில் பிரியந்தி 60 கிலோகிராம் நிறை பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும், கே. பிரசாந்தினி 67 கிலோகிராம் நிறைபிரிவில் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இக்குத்துச்சண்டை போட்டியில் பெறப்பட்ட பெருமளவிலான பதக்கங்களின் மூலம் மொத்தமாக வடமாகாணம் 6 தங்கப்பதக்கம், 2 வெள்ளி பதக்கம், 12 வெண்கலப் பதக்கங்களை ( மொத்தமாக 20 பதக்கங்களை) பெற்று தேசிய ரீதியில் 8வது நிலைக்கு முன்னேறியது.

வடமாகாணம் இதற்கு முதல் 9வது நிலையிலேயே தொடர்ச்சியாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

குத்துச்சண்டை வீரர்களால் வடமாகாணத்திற்கு 20 பதக்கங்கள் Reviewed by Author on September 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.