அண்மைய செய்திகள்

recent
-

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிற்கும், ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகைக்கும் இடையில் விசேட சந்திப்பு.(படம்)


உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிற்கும், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகைக்கும் இடையில் இன்று சனிக்கிழமை மாலை விசேட சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

மன்னார் ஆயர் இல்லத்திற்கு இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் விஜயமொன்றை மேற்கொண்டு சென்றிருந்த அமைச்சருக்கும், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகைக்கும் இடையில் சந்திப்பு இடம் பெற்றது.

இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும் கலந்து கொண்டிருந்தார்.

-இதன் போது சமகால அரசியல் நிலவரங்கள்,மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள்,தடைப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

-இதன் போது குறித்த சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிற்கும், ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகைக்கும் இடையில் விசேட சந்திப்பு.(படம்) Reviewed by NEWMANNAR on September 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.