எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயம்.(படம்)
தமிழ் தேசிய கூட்டமைப்பின்தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் இன்று(30) சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
ஆயர் இல்லத்திற்குச் சென்ற எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகையை சந்தித்து ஆசி பெற்றதோடு,நாட்டின் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் உரையாடினார்.
இதன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலைய ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையினையும் சந்தித்து உரையாடினார்.
அதனைத்தொடர்ந்து வடமாகாணத்தில் காணமால் போனவர்களின் உறவினர்களுக்கும்,எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.
இதன் போது மன்னார்,வவுனியா,கிளிநொச்சி,மு ல்லைத்தீவு மற்றும் யாழ் மாவட்டங்களில் காணாமல் போனவர்களின் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது காணாமல் போனவர்களின் நிலைப்பாடு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக அறிய முடிகின்றது.
எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயம்.(படம்)
Reviewed by NEWMANNAR
on
September 30, 2017
Rating:
No comments:
Post a Comment