மன்னாரில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்துமாநாடு மாலை நிகழ்வுகள்...2017(படங்கள்)
மன்னார் மாவட்ட அறநெறிப்பாடசாலைகளின் இணையமும் இணைந்து நடாத்தும் இந்து மாநாடு காலை மாலை நிகழ்வாக இந்துசமயத்தின் சிறப்புக்கள் பெருமைகள் அதன் தாற்பரியம் பின்பற்றப்படவேண்டிய விடையங்கள் மிகவும் சிறப்பான முறையில் எடுத்துக்கூறப்பட்டது.
.
மாலை நிகழ்வுகள் முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் அரங்கில் தமிழ்நாடு பேரூர் ஆதினம் இளைய சந்நிதானம் தவத்திரு.மருதாச்சலம் அடிகளார் முன்னிலையில், சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கை கிளைத்தலைவர் சிவத்தமிழ் செல்வர் சிவ.கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்
கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம்,
வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்,
பேராதனை பல்கலைகழகத்தின் தமிழ்த்துறை தலைவர் வ.மகேஸ்வரன், முனைவர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ்,
யாழ். அறிவு திருக்கோவில் தலைவர் மனவளகலை பேராசிரியர் அருள்நிதி சி.முருகானந்தவேல், மட்டகளப்பு இந்து இளைஞர் மன்ற தலைவர் சீ.யோகேஸ்வரன், மன்னார் இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன்,
யாழ்.இந்துகல்லூரி அதிபர் ஏ.ஐ.தயானந்தராஜா,
லண்டன் சிவன் கோவில் அறங்காவலர் எஸ்.பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது இந்து சமயத்தின் தொன்மை, அதன் வரலாற்றுச் சிறப்புக்கள் தொடர்பான கருத்துரைகள் இடம்பெற்றதுடன் கலை நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது. இதில் உலகப் புகழ் பெற்ற பேச்சாளர் சொல்வேந்தர் சுருகி சிவம் அவர்களின் சிறப்பு கருத்துரைகளும் சிறப்பு சொற்பொழிவுகள் கலைநிகழ்வுகள்
பரதம் நடனம் வயலின் இசைக்கச்சேரி இடம்பெற்றது அத்துடன் சமயத்திற்கும் இந்துமக்களுக்கும் அயராது பணிசெய்து கொண்டு இருக்கும் நான்கு தொண்டர்களுக்கு சமூகச்சுடர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பரதம் நடனம் வயலின் இசைக்கச்சேரி இடம்பெற்றது அத்துடன் சமயத்திற்கும் இந்துமக்களுக்கும் அயராது பணிசெய்து கொண்டு இருக்கும் நான்கு தொண்டர்களுக்கு சமூகச்சுடர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறிப்பு
மன்னாரில் பல நிகழ்வுகள் குறைவான பார்வையாளர்களுடன் தான் இருக்கும் ஆனால் இன்று நடைபெற்ற இந்து மாநாட்டுக்கு நகரசபை மண்டபம் நிறைந்து மேல்தளமும் அத்தோடு அருகில் புதிதாக தற்காலிகமண்டபமும் அமைத்து திரையில் நிகழ்வுகள் காண்பிக்கப்பட்டது.
உண்மையில் தற்போது உள்ள இளைஞர்கள் யுவதிகள் நவநாகரிக வாழ்வோடு கலந்து விட்டார்கள் என்று சொல்லுகின்றோம் கையில் தொலைபேசிகளோடு திரிந்தாலும் இன்று இந்துமாநடு காலை தொடக்கம் மாலைவரை முழுமையாக பங்கெடுத்து கொண்டதை பார்க்கும் போது மனம்மகிழ்கின்றது.
இப்படியான சமயகலாச்சாரநிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருமானால் எமது இளைஞர் யுவதிகளின் மூலம் எமது சமயமும் கலாச்சாரமும் பாதுகாக்கப்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை...
-வை.கஜேந்திரன்-
மன்னாரில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்துமாநாடு மாலை நிகழ்வுகள்...2017(படங்கள்)
Reviewed by Author
on
October 08, 2017
Rating:
No comments:
Post a Comment