நெடுந்தீவு கடற்பரப்பில் 4 இந்திய மீனவர்கள் கைது....
நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட 4 தமிழக மீனவர்களை இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தொழிலை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் குறித்த நான்கு இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து ஒரு படகு உள்ளிட்ட மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்படட சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் காங்கேசன்துறை நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் 4 இந்திய மீனவர்கள் கைது....
Reviewed by Author
on
November 08, 2017
Rating:

No comments:
Post a Comment