அண்மைய செய்திகள்

recent
-

காலியில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு உத்தரவு -


காலியில் நேற்றைய தினம் ஆறு மணி முதல் இன்று காலை ஆறு மணி வரையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருந்துவத்தை, வெலிபிட்டிமோதர, மஹாலபுகல, உக்வத்த, ஜின்தோட்டை (மேற்கு மற்றும் கிழக்கு), பியதிகம ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

காலியின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் அமைதியற்ற நிலை ஏற்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்த பிரதேசத்தில் அசாதாரண நிலைமையை தோற்றுவித்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில 19 பேர் வரையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
காலியில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு உத்தரவு - Reviewed by Author on November 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.