அண்மைய செய்திகள்

recent
-

கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பில் வாழ்ந்து கொண்டு வடக்கைப் பற்றி எப்படிப் பேச முடியும்? ....அருமையான கேள்வி


தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கொழும்­பில் இருந்து எப்­படி வடக்­குப் பிரச்­சினை பற்­றிப் பேச முடி­யும். அதி­கார பகிர்வு தேவை­யில்லை.
வடக்கு மக்­களோ யாழ்ப்­பாண மக்­களோ அத­னைக் கேட்­க­வில்லை. அவர்­கள் தமது அன்­றா­டப் பிரச்­சி­னையைத் தீர்க்­கத்­தான் கேட்­கின்­றார்­கள்.
இவ்­வாறு மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் குமார வெல்­கம தெரி­வித்­தார். அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யில் இடைக்­கால அறிக்கை மீதான நேற்­றைய விவா­தத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாம் அதி­கா­ரத்­தைப் பகிர்­வது பற்­றிப் பேசு­கின்­றோம். எரி­பொ­ருள் தட்­டுப்­பாட்­டால் மக்­கள் கஷ்டப்­ப­டு­கின்­ற­னர். பெற்­றோ­லைப் பகிர்ந்­த­ளிக்க முடி­யாத அர­சால் அதி­கா­ரத்தை எப்­ப­டிச் சரி­யா­கப் பகிர்ந்­த­ளிக்க முடி­யும்.
கடந்த காலங்­க­ளில் உரு­வாக்­கப்­பட்ட அர­ச­மைப்பு மக்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கி­யது. அதி­கா­ரத்தை பகி­ரும் அள­வுக்கு நாட்­டில் பிரச்­சி­னை ­கள் இல்லை. யாழ்ப்­பாண மக்­க­ளுக்கு அனைத்து வச­தி­க­ளை­யும் வழங்­க­வேண்­டும்.
வடக்கு மக்­கள் அதி­கா­ரத்­தைப் பகி­ரக் கோர­வில்லை. அவர்­கள் தங்­கள் அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­யைத் தீர்க்­கவே கேட்­கின்­ற­னர்.அர­சி­யல் கட்­சி­கள்­தான் அதி­கா­ரத்­தைப் பகிர்­வது பற்­றிப் பேசு­கின்­றன. புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் அமெ­ரிக்­கா­வுக்கே தேவை­யாக இருக்­கின்­றது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­கள், மாகா­ண­ச­பை­கள் இருக்­கின்­றன. ஏன் அதி­கா­ரங்­க­ளைப் பகி­ர­வேண்­டும். பிர­பா­க­ர­னு­டன் பேச்சு நடத்த வாய்ப்பு இருந்­தது. அவர் அந்­தச் சந்­தர்­பத்தை வீண­டித்­தார். அவ­ருக்குத் தேவை­யாக இருந்­த­தும் அதி­கா­ரம்­தான். யாழ்ப்­பாண மக்­கள் துன்­பப்­ப­டும்­போது அவர் சொகு­சாக வாழ்ந்­தார்.
நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ர­ னுக்கு தெற்­கில் வாழ்­வ­தற்கு என்ன பிரச்­சினை இருக்­கின்­றது ? வடக்­கில்­தான் பிரச்­சினை உள்­ளது. தெற்­கி­லி­ருந்து சென்று வடக்­கில் வாழ முடி­யாது. ஆனால் தெற்­கில் எல்­லோ­ரும் ஒன்­றாக வாழ­மு­டி­யும்.

யாழ்ப்­பாண மக்­கள் மீது நாம் அதீத அன்பு வைத்­தி­ருக்­கின்­றோம். சிறி­மாவோ வடக்கு விவ­சா­யி­களை நன்கு கவ­னித்­தார். அந்த மக்­கள் அவ­ருக்­குப் பெரும் ஆத­ரவு வழங்­கி­னர்.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கொழும்­பில் இருந்து கொண்டு வடக்­குப் பிரச்­சினை பற்றி எப்­ப­டிப் பேச­மு­டி­யும். அதி­கா­ரப் பகிர்வு தேவை­யில்லை.
அதற்­குப் பதி­லாக இரா­ணு­வத்துக்குத் தேவை­யான காணி­களை எடுத்­துக் கொண்டு ஏனைய காணி­களை மக்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­க­வேண்­டும். அர­சி­யல் கைதி­களை விடு­விக்­க­ வேண்­டும். அதற்கு மாறாக அதி­கா­ரத்­தைப் பகிர்­வதை ஏற்­றுக் கொள்ள முடி­யாது.
அரச தலை­வர் முறை­மையை ஒழிக்­க­வேண்­டும். இந்­தியா போன்று அரச தலை­வர் முறைமை இருக்­க­வேண்­டும்.
கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பில் வாழ்ந்து கொண்டு வடக்கைப் பற்றி எப்படிப் பேச முடியும்? ....அருமையான கேள்வி Reviewed by Author on November 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.