தேசியக்கலைஞர் எஸ்.ஏ,உதயன் எழுதிய உ.பி.83 நாவல் நூல் அறிமுக விழா சிறப்பாக இடம்பெற்றது...
தேசியக்கலைஞர் எஸ்.ஏ,உதயன் எழுதிய
உ.பி.83 ஈழப்போராட்டத்தில் பேசப்படாத ஒரு பக்கம் 2016ல் வடமாகாண சிறந்த விருது பெற்ற நாவல்- காலம்-01- 12- 2017
- நேரம்-காலை 9-30 மணி
- இடம்-கலையருவி மன்னார்
- காவியஸ்ரீ மன்னார் அமுதன் தலைமையில்
விருந்தினர்களாக- திருமதி.நந்தினி ஸ்ரான்லி டிமெல்-மேலதிக அரசாங்க அதிபர்
- திரு.பெனடிக்ட் நாதன் மிராண்டா உதவிப்பணிப்பாளர் கடற்றொழில்
- அருட்பணி தமிழ்நேசன் அடிகளார்
- ஸ்ரீ தர்மகுமாரகுருக்கள்
- அ.கியோமர் குலாஸ் எந்திரி-ரெலிகொம்
- சி.அன்ரன் யோகேஸ்வரன் வைத்தியகலாநிதி
இவர்களுடன் முதன்மைப்பிரதிகள் பெற்றுக்கொண்டவர்கள்
வரவேற்புரையினை மன்னுரான் ஷிஹார் வழங்க
ஆசியுரையினை அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் வழங்க
வாழ்த்துரையை ஸ்ரீ தர்மகுமாரகுருக்கள் வழங்க
தலைமையுரையை காவியஸ்ரீ மன்னார் அமுதன் வழங்க
சிறப்பு நிகழ்வாக நூல்வெளியீட்டினை அதிகள் வெளியிட நூல் அறிமுகத்தினை மன்னுரான் ஷிஹார் வழங்க
விருந்தினர்கள் உரையின் சாரம்சமாக
மன்னார் மாவட்டத்தில் இருந்து தனது எழுத்துத்திறமையால் தேசியரீதியிலும் வெளிநாட்டிலும் மிளிரும் உதயன் அவர்களினால் எமது மன்னார் மாவட்டத்திற்கு பெருமையடைகின்றது எமது வாழ்வியலை கலைப்பண்பாட்ட்டை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லும் பெரும் முயற்ச்சிதான் இவ்வாறான நூல்வெளியீடுகள் என்று சொல்லலாம் அதும் எமது வாழ்வின் அங்கமான போருக்குப்பின்னான வாழ்வியலும் அந்தப்போரின் பாதிப்பு நிலைமையினை எடுத்துக்கூறும் இவ்வாறான நூல்கள் எமது காலத்தின் கண்ணாடி எனலாம்.- எழுத்தாளர்கள் தமது இனம் மொழி கலாசாரம் சார்ந்து தமது திறமையுடன் வாழ்வியலை எழுத்துருவில் கொண்டுவருவதற்கு பணத்தினையும் நேரத்தினையும் உழைப்பையினையும் செலவழித்து வெளிக்கொண்டு வருகின்றார்கள் அவர்களையும் அவர்களது படைப்புக்களையும் போற்றவேண்டும் வரவேற்க வேண்டும்.நன்றியுரையினை சு.நிக்சன் குரூஸ் வழங்க ஏற்புரையினை நூலாசிரியர் எஸ்.ஏ,உதயன் வழங்க இவ்நிகழ்வினை அழகாக தொகுத்து வழங்கினார் கவிதாயினி சர்மிளா திருநாவுக்கரசு.

தேசியக்கலைஞர் எஸ்.ஏ,உதயன் எழுதிய உ.பி.83 நாவல் நூல் அறிமுக விழா சிறப்பாக இடம்பெற்றது...
Reviewed by Author
on
December 01, 2017
Rating:

No comments:
Post a Comment