தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் பிடி வலைகள் கடலில் சேதம்-(படம்)
மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் பிடி வலைகள் பாப்பாமோட்டை கடற்பரப்பில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் கடந்த சில தினங்கலாக முழுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பாதீக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் கோந்தை பிட்டி கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதற்காக கடலில் போடப்பட்டிருந்த தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மீனவர்களின் பெறுமதி மிக்க மீன் பிடி வலைகலே கடந்த சில தினங்களாக இனம் தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பாதீக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
விடத்தல் தீவு மற்றும் பாப்பாமோட்டை கடற்பிரதேசத்தில் தோட்டவெளி யோசப்வாஸ் நகர் கிராம மீனவர்கள் பல வருடங்களாக மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறகு வலை தொழிலானது விடத்தல் தீவு பாப்பாமோட்டை கடற்பிரதேசத்தில் மாத்திரமே மேற்கொள்ள முடியும் எனவும் குறித்த தொழிலை மேற்கொள்ளும் போது தமக்கும் பாப்பாமோட்டை மீனவர்களுக்கும் இடையில் தர்க்கங்கள் ஏற்படுவது வழமை எனவும் பாதீக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் பிரச்சினைகள் சங்கத்தினூடாகவும், மீன்பிடி திணைக்களத்தினூடாகவும் கதைத்து தீர்த்துக்கொள்ளுவது வழமை.
இந்த நிலையில் சுமார் 8 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய மீன் பிடி வலைகள் கடலில் வைத்து கடந்த சில தினங்கலாக வெட்டப்பட்டு முழுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த வலைத்தொகுதிகள் பயண்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும் அந்த மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடலை யாரும் உரிமை கோர முடியாது. எங்களுடன் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய விடையம்.
ஆனால் இவ்வாறு வலைத்தொகுதிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளமை வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த பாதீக்கப்பட்ட ஜோசப்வாஸ் நகர் மீனவர்கள் தமது பாதீப்புக்கள் குறித்து அடம்பன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் பிடி வலைகள் கடலில் சேதம்-(படம்)
Reviewed by Author
on
January 26, 2018
Rating:

No comments:
Post a Comment