அண்மைய செய்திகள்

recent
-

பாக் ஜலசந்தி கடல் வழியாக ஊடுருவிய இலங்கை நபர் கைது:- மெரைன போலீசார் நடவடிக்கை:(VIDEO)


குடியரசு தினத்தை முன்னிட்டு தீவிரவாத தாக்குதல் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இந்திய இலங்கை கடல் எல்லைப் பகுதிகளான ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஸ்கோடி, மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி, குருசடைத்தீவு உள்ளிட்ட பகுதியில்  தமிழக மெரைன போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை கடற்கரைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக ஒருவர் சுற்றித் திரிவதாக தகவல் கிடைத்ததும் அந்த இளைஞனை இன்று அதிகாலை கைது செய்தனர்.

தனுஸ்கோடி மெரைன போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் இலங்கை பருத்தித்துறைச் சேர்ந்த சியாமலன் எனவும்,   மண்டபம் முகாமில் தனது மனைவியுடன் வசித்து வந்த இவர் 2012ல் இலங்கை சென்றுள்ளார்.

கடன் தொல்லை காரணமாக நேற்று இரவு தலைமன்னாரிலிருந்து படகிற்க்கு  ரூ. 60 ஆயிரம் செலுத்தி படகு மூலம் தனுஸ்கோடி இரண்டாம் மணல் திட்டியில் வந்து இறங்கிய சியாமலன்  அங்கிருந்து  தனுஷ்கோடியை சேர்ந்த நாட்டு படகில்  அரிச்சல்முனை வந்ததாகவும் தமிழகத்தில் உள்ள உறவினர்களிடம் சேர்ந்து வாழவே கடவுசீட்டு இல்லாமல் இந்தியா வந்ததாக தெரிவித்துள்ளார்.

இவரிடமிருந்து செல்போன் மற்றும்  இந்திய பணம் ரூ. 9000மும் கைப்பற்றப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் சியாமலன் சிறையில் அடைக்கப்படுவார்.


பாக் ஜலசந்தி கடல் வழியாக ஊடுருவிய இலங்கை நபர் கைது:- மெரைன போலீசார் நடவடிக்கை:(VIDEO) Reviewed by Author on January 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.