அண்மைய செய்திகள்

recent
-

பேயை திருமணம் செய்து கொண்ட விசித்திர பெண்: வாழ்க்கை சந்தோசமாக உள்ளது என பேட்டி


பேயுடன் வாழ்வது மிகவும் நன்றாக இருப்பதாக அயர்லாந்தைச் சேர்ந்த பெண் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தைச் சேர்ந்தவர் அமண்டா டீக். சிறுவயதில் இருந்தே கடற்கொள்ளையர்களை பற்றி படித்தும், படம் பார்த்தும் வளர்ந்து வந்துள்ளார்.
இதன் கராணமாக இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு கடற்கொள்ளையன் ஒருவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் இவர் திருமணம் செய்த நபரோ 300 ஆண்டுகளுக்கு முன்பே மரணமடைந்துள்ளார்.

கரிபியனை சேர்ந்த ஜாக் லார்ஜ் என்பவரை தான் அப்பெண் திருமணம் செய்துள்ளார். அவர் தன்னிடம் பேயாக வந்து காதலை சொன்னதாகவும், முதலில் நண்பர்களாக இருந்த நாங்கள் அதன் பின் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
இந்த திருமணத்திற்கு அவர் நண்பர்களை எல்லாம் அழைத்து இருக்கிறார். ஆனால் இந்த திருமணத்தை அயர்லாந்து அரசு ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால், கடந்த ஆண்டு மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இருந்த போதிலும் அவரது திருமணம் பதிவு செய்யப்படவில்லை.

பேயுடன் நடக்கும் திருமணத்திற்கு எந்த நாடு ஒப்புக் கொள்கிறதோ அங்கு குடியுரிமை வாங்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் பேயுடன் வாழ்வது மிகவும் நன்றாக இருக்கிறது என்றும் எனக்கு அவர் பேய் இல்லை. உலகில் இருக்கும் தம்பதிகளை விட எங்கள் வாழ்க்கை அழகாக இருக்கிறது என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
பேயை திருமணம் செய்து கொண்ட விசித்திர பெண்: வாழ்க்கை சந்தோசமாக உள்ளது என பேட்டி Reviewed by Author on January 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.