அண்மைய செய்திகள்

recent
-

3 வயது சிறுமி கடும் பனியில் உறைந்து பலி: பாடசாலையில் நடந்த கொடூரம் -


ரஷ்யாவில் பாடசாலை ஒன்றில் 3 வயது சிறுமி கடும் பனியில் உறைந்து போய் பலியான சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மழலையர் பள்ளியிலேயே குறித்த மனதை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தின்போது குறித்த பாடசாலையில் குறிப்பிட்ட மாணவர்களை அதன் ஆசிரியர் விளையாட அனுமதி அளித்து வெளியே விட்டுள்ளனர்.
அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்ததும் மாணவர்கள் அனைவரையும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு உள்ளே அனுமதித்துள்ளனர்.
ஆனால் ஒரு மாணவி மட்டும் அதில் விடுபட்டுள்ளார். 2 மணி நேரம் தாண்டிய பின்னரே ஆசிரியர்களுக்கு குறித்த மாணவியின் நினைவு வந்துள்ளது.

உடனடியாக வெளியே சென்று பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. -5C குளிரில் குறித்த சிறுமி பனிக்குவியலாக காட்சியளித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.


3 வயது சிறுமி கடும் பனியில் உறைந்து பலி: பாடசாலையில் நடந்த கொடூரம் - Reviewed by Author on February 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.