நளினி, முருகன், பேரறிவாளனை விடுதலை செய்யலாம்: தமிழக அரசுக்கு பரிந்துரை -
அண்ணா பிறந்த தினம், காந்தி ஜெயந்தி போன்ற தலைவர்கள் பிறந்த நாட்களில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது.
சமீபத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகச் சிறையில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
அதன்படி கடந்த 1-ம் திகதி அரசு வெளியிட்ட அரசாணையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகளை விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல் விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இதையடுத்து தமிழக உள்துறை செயலாளர், தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பி வைத்தார்.
அதன்படி 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
அரசுக்கு சிறைத்துறை பரிந்துரைத்துள்ள பட்டியலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோர் பெயரும் இடம் பெற்றுள்ளது.
ஆனால் இதன் இறுதி முடிவை அரசு தான் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நளினி, முருகன், பேரறிவாளனை விடுதலை செய்யலாம்: தமிழக அரசுக்கு பரிந்துரை -
Reviewed by Author
on
February 09, 2018
Rating:

No comments:
Post a Comment