அண்மைய செய்திகள்

recent
-

நுளம்புகளைக் கொல்லக் கூடிய வகையில் மனித ரத்தத்தை மாற்றியமைத்து ஆராய்ச்சி -


உலகளவில் நுளம்புகள் மனிதர்களுக்கு பெரும் சவால் நிறைந்த உயிரினமாக காணப்படுகின்றது.
இவற்றினால் காவப்படும் நோய்களை கட்டுப்படுத்துவதில் பல சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு மனித இரத்தத்தினை உறுஞ்சும்போது நுளம்புகள் மரணமடையக்கூடிய வகையில் மாற்றியமைக்கும் ஆராய்ச்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனை கென்யாவினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இம் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக 47 நபர்களின் ரத்தத்தில் 600 மில்லி கிராம் வரை Ivermectin எனும் பதார்த்தம் சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு Ivermectin சேர்க்கப்பட்ட மூன்று நாட்களின் பின்னர் அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த ரத்த மாதிரியானது தொடர்சியாக 28 நாட்கள் நுளம்புகளுக்கு எதிராக செயற்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பரிசோதனையின்போது இவ்வாறான ரத்தத்தைக் குடித்த 97 சதவீதமான நுளம்புகள் மரணமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நுளம்புகளைக் கொல்லக் கூடிய வகையில் மனித ரத்தத்தை மாற்றியமைத்து ஆராய்ச்சி - Reviewed by Author on April 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.