வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள ஆபத்தான அறிக்கை! -
போதையிலிருந்து விடுபட்ட வன்னி எனும் தொனிப்பொருளில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர்,
கடந்த 2017 ஆம் ஆண்டு வவுனியாவில் 7355 நபர்களும், மன்னார் மாவட்டத்தில் 7159 நபர்களும் போதைக்கு அடிமையானவர்களாக இனங்காணப்பட்டுள்ள போதும், வவுனியாவில் 158 பேரும், மன்னாரில் 82 பேர் மாத்திரமே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
அதனால் பொலிஸ் அறிக்கையின் பிரகாரம் இனங்காணப்பட்ட போதைக்கு அடிமையான நபர்களுக்கு எதிர்வரும் யூலை மாதத்திலிருந்து புனர்வாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அத்துடன் எதிர்காலத்தில் வன்னி மாவட்டத்தில் சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்படுவார்கள்.
ஜனாதிபதியின் செயற்திட்டத்திற்கு அமைவாக வன்னியை மாணவர்களின் உதவியுடன் மது போதையற்ற பிரதேசமாக மாற்றுவோம் என தெரிவித்தார்.
மன்னாரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையை ஒழிக்க பொலிசார் புதியநடவடிக்கை!
ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் அமைக்கப்பட்ட தேசிய மது போதை ஒழிப்புஜனாதிபதி செயலணியின் வழிகாட்டலில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் படி வன்னிபிராந்திய பொலிஸ் பிரிவுகளில் போதைப் பொருள் கடத்தல் மது போதை மதுசாரதவிர்ப்பிற்காக அமைக்கப்பட்ட கிராமிய மதுபோதை ஒழிப்பு குழுவிற்கு வலுவூட்டல்வேலைத்திட்டம் நேற்று வியாழக்கிழமை(5) மாலை வன்னி பிராந்திய பொலிஸ்அத்தியட்சகர் தேசபந்து தென்னக்கோன் அவர்களினால் வைபவ ரீதியாக மன்னார் நகரமண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மது போதை தவிர்ப்பு வேலைத்திட்டம் வன்னிப் பிராந்தியம் என்னும் தொனிப்பொருளில்குறித்த நடவடிக்கைக்கு பொலிஸ் பொது மக்கள் சிவில் அமைப்பை முற்றாகஈடுபடுத்தும் நோக்கில் மாவட்ட பகுதிகளிலுள்ள பல்வேறு தரப்பினர் சுமார் 700பேர் வரை கலந்து கொண்டு குறித்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி இருந்தனர்.
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக பிரத்தியேக கைபேசி சிம்கார்டுகள்இலவசமாக சிவிலமைப்பு உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக மன்னார் மாவட்டபோதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிக்கு வன்னி பிராந்திய பொலிஸ்அத்தியட்கரினால் வழங்கி வைக்கப்பட்டது.
கொழும்பு தலைமைக் காரியலயத்திலிருந்து வருகை தந்த போதைப்பொருள் தடுப்புபிரிவினர், வருகை தந்திருந்த சிவில் அமைப்பினருக்கு விழிப்புணர்வு செயலமர்வைமேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள ஆபத்தான அறிக்கை! -
Reviewed by Author
on
April 06, 2018
Rating:

No comments:
Post a Comment