வித்தியா குடும்பத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இன்று நிறைவேற்றிய ஜனாதிபதி -
பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான யாழ். பல்கலைக்கழகப் பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அவர் தனது நியமனத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த வருடம் ஜனாதிபதி, வவுனியாவுக்குச் சென்ற போது மாணவி வித்தியாவின் வீட்டிற்கும் விஜயம் சென்றிருந்தார். இதன்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மாணவி வித்தியாவின் தாயாரான சரஸ்வதி சிவலோகநாதன் மற்றும் வித்தியா சிவலோகநாதன் மன்றத்தின் தலைவி திரைப்பட கலைஞர் சுவினீதா வீரசிங்க ஆகியோரும் இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வித்தியா குடும்பத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இன்று நிறைவேற்றிய ஜனாதிபதி -
Reviewed by Author
on
April 25, 2018
Rating:

No comments:
Post a Comment