அண்மைய செய்திகள்

recent
-

கிரிக்கெட்டில் பந்து வீசுபவரே கேட்ச் பிடிக்கும் நிகழ்வு: இலங்கை ஜாம்பவான் முதலிடம் -


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசும் பந்துவீச்சாளரே பந்தை கேட்ச் பிடித்து துடுப்பாட்ட வீரரை அவுட்டாகியதை இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் அதிகமுறை செய்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை இச்செயலை முரளிதரன் 35 முறை செய்து முதலிடத்தில் உள்ளார்.

இந்திய வீரர் அனில் கும்ப்ளேவும் 35 முறை செய்து முதலிடத்தை முரளிதரனுடன் பகிர்ந்துள்ளார்.
நியூசிலாந்து வீரர் விட்டோரியும், அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே 21 முறையுடன் இரண்டாமிடத்தில் உள்ளனர்.

அண்டர்வுட் 20 முறையுடன் மூன்றாமிடத்தில் உள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டிலும் முரளிதரன் 35 முறை பந்து வீசி கேட்ச் பிடித்து முதலிடத்தில் உள்ளார்.
இதில் ஹாரிஸ் 29 முறையுடன் இரண்டாமிடத்திலும், அப்ரிடி 24 முறையுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

கிரிக்கெட்டில் பந்து வீசுபவரே கேட்ச் பிடிக்கும் நிகழ்வு: இலங்கை ஜாம்பவான் முதலிடம் - Reviewed by Author on May 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.