அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனுடன் விசேட கலந்துரையாடல்-படம்

மன்னார் மாவட்டத்தில் விவசாய அபிவிருத்தி நடவடிக்கையை மேம்படுத்தும் வகையில் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் 26-07-2018காலை மன்னாரில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
மன்னார்  கமநல அபிவிருத்தி திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னாரில்  உள்ள 12 கமநல சேவைகள் நிலையங்களில் கடமையாற்றும் பிரதி நிதிகளை சந்தித்து பல்வேறு நீண்ட கால பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார்.

மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் நேரடி பார்வையில் 55 ஆயிரம் ஏக்கர் விவசாய செய்கைக்கு உற்பட்ட காணிகள் மற்றும் 400 சிறிய நீர்ப்பாசனக் குளங்களை இதற்கான பல்வேறு அபிவிருத்திகள் குறித்து வருகைதந்திருந்த பிரதி நிதிகளால் பிரச்சனைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அமைச்சருக்கு எடுத்துக் கூறப்பட்டது.

 பிரதானமாக கட்டுக்கரை குளத்தின் அணைக்கட்டுகளை உயர்த்தி நீர்த்தேக்கத்தை அதிகரிப்பது, அகத்தி முறிப்பு குலத்திற்கான நீர் வரத்தை அதிகரிப்பது,
விவசாயிகளின் நன்மை கருதி கமநால நிலையங்களை புனரமைப்பது மற்றும் நிர்மாணிப்பது,
விவசாய வீதிகள் விவசாய நீர்ப்பாசன குளங்கள் உலர வைப்பது, நீண்ட காலமாக அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படாத விவசாய நடவடிக்கைகள் அவரிடம் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.

  மேலும் விவசாய காணிகள்  கையகப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அமைச்சருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கான உரிய தீர்வுகளை தாம் பெற்று தருவதாகவும், இனி வரும் காலங்களில் குறித்த விவசாய பகுதிகளுக்குச் சென்று நேரடியாக தான் பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

 விவசாயிகளால் தமது தேவை குறித்த பல்வேறு திட்டங்கள் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர் -



மன்னாரில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனுடன் விசேட கலந்துரையாடல்-படம் Reviewed by Author on July 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.