அண்மைய செய்திகள்

recent
-

பிளேபாயிலிருந்து பிரதமர் வரை: இம்ரான்கானின் கலர்புல் பின்னணி -


ஒரு பணக்கார சிவில் எஞ்சீனியரின் மகனான இம்ரான் கான், பாகிஸ்தானிலிருந்து பிரித்தானியாவுக்கு பயணப்பட்டார்.
தத்துவமும் அரசியலும் பொருளாதாரமும் கற்ற இம்ரான்கான் அங்கு தனது முதல் கிரிக்கெட் போட்டியில் பங்குபெற்றார்.
Sussexக்காக விளையாடத் தொடங்கிய இம்ரான் லண்டனின் பார்ட்டி கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டார்.
பல பிரபல அழகிகளின் தொடர்பு கிடைக்க நான் இவ்வளவு அழகு என்று நானே நினைக்கவில்லை என்பார் அவர்.
.
பெண்களுடனான தொடர்புகள் 1992 ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபின் மாறத்தொடங்கின.
அந்த நேரத்தில் Sita என்னும் பெண்ணுடன் ஒரு மகள் இருப்பதாக வந்த செய்திகளை மறுத்த இம்ரான், இஸ்லாம் மீதான தனது மரியாதையை வலியுறுத்தும் ஒரு நபராக தன்னை முன்னிறுத்தத் தொடங்கினார்.
தனது தாயின் நினைவாக ஒரு புற்று நோய் மருத்துவமனைக்காக நிதி திரட்ட தொடங்கிய அவர் தனது நம்பிக்கையை மீண்டும் கண்டு கொண்டதாகவும் தினமும் பிரார்த்தனை செய்வதாகவும் கூறலானார்.

அப்போதுதான் யூதப்பெண்மணியான ஜெமீமாவுடனான காதல் குறித்த விடயங்கள் வெளியாகின. 1995 இல் தொடங்கிய திருமண உறவு 2005இல் கலகலத்துப்போனது.
2015இல் ரேஹம் கான் என்னும் பெண்ணுடன் திருமணம். அந்த திருமணமும் தோல்வியில் முடிய தற்போது அவர் திருமணம் செய்துள்ள மனேகா என்னும் பெண்ணைக் குறித்துக் கூறும்போது திருமணத்திற்குமுன் அவரது முகத்தைத் தான் பார்க்கவேயில்லை என்றார் இம்ரான்.
ஒரு காலத்தில் ஒரு பிளேபாயாக பார்க்கப்பட்ட இம்ரான் இன்று பாகிஸ்தான் பிரதமராகும் வாய்ப்பை நெருங்கி விட்டார்.
ஒரு கிரிக்கெட் வீரராக, ஒரு பிளேபாயாக இருந்து பின்னர் அரசியல்வாதியான இம்ரான்கானை உலகம் இன்று உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
பிளேபாயிலிருந்து பிரதமர் வரை: இம்ரான்கானின் கலர்புல் பின்னணி - Reviewed by Author on July 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.