அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை பெண்கள் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் -


இலங்கையின் பெண்கள் பாலியல் வர்த்தக நோக்கத்துக்காக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த தகவலை அமரிக்காவின் 2018ஆம் ஆண்டுக்கான ஆட்கடத்தல் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கை உட்பட்ட சில நாடுகளின் பெண்கள் இந்த வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படுவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைப்பெண்களுடன் பாகிஸ்தான், ஈரான், பிலிப்பைன்ஸ் பெண்களும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் அதிக சம்பளம் என்ற போர்வையில் இந்த வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதாகவும் இதன்மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் மற்றும் ரோஹிங்கியா அகதி பெண்கள் மத்தியில் பாலியல் பலாத்கார தொந்தரவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெண்கள் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் - Reviewed by Author on July 08, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.