மன்னார் புதைகுழி மனித எச்சங்கள் இதுவரை 440 பைகளில்........
மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட சந்தோகத்தை அடுத்து மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வில் தற்போதும் மேலும் சந்தோகத்தை ஏற்படுத்தும் விதமாக அனோக மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாகத்தை விரிவுபடுத்தி
இவ் அகழ்வுப் பணியானது இன்று (03.08.2018) 47 வதுதடவையாக இடம்பெற்றுவருகின்றது.
இன்றும் இவ் பணியானது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள் மண்டையோடுகளை வெளியேற்றும் நோக்குடன் அகழ்வு செய்யப்பட்டு வருகின்றது.
அத்துடன் தற்போது அகழ்வு பணியானது மையப்பகுதியை விடுத்து வளாகத்தின் நுழைவு பகுதியிலோயே அதிக கவணம் செலுத்தி தோண்டப்படுகின்றது அத்துடன் இவ்விடத்துக்கு அருகாமையிலுள்ள நடைபாதையில் கடல்மட்டத்தில் இருந்து ஐந்து அடி ஆழத்திற்கு அகழ்வை விரிவுபடுத்திய இடத்திலேயும் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்றும் சந்தோகத்திற்குறிய மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டுள்ளது குறித்த வளாகத்தில் இரு வேறு பகுதிகளில் வித்தியாசமான நிலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது மேற்படி வளாகத்தின் மையப்பகுதியில் எந்த வித குழப்பமும் இன்றி ஒழுங்கான நிலையில் புதைக்கப்பட்ட மனித எச்சங்கள் சிலவும் அதே நேரத்தில் வளாகத்தின் நுழைவு பகுதியில் ஓன்றுடன் ஒன்று செருகிய விதமாகவும் அவசர அவசரமாக புதைக்கபட்ட விதத்திலும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன
தற்போது மையப்பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக அதிக கவணம் செலுத்தப்படவில்லை எனவும் வளாகத்தின் நுழைவு பகுதிகளில் உள்ள மனித எச்சங்கள் தொடர்பாகவே கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வரை குறித்த வளாகத்தில் இருந்து 66 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் 56 மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன இதுவரை மீட்கப்பட்ட 56 மனித எச்சங்களும் 440 பைகளில் இலக்கங்கள் இடப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தின் இவ்வாரத்தில் இரண்டு மோதிரங்கள் தடைய பொருட்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இவ் அகழ்வுப் பணியானது இன்று (03.08.2018) 47 வதுதடவையாக இடம்பெற்றுவருகின்றது.
இன்றும் இவ் பணியானது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள் மண்டையோடுகளை வெளியேற்றும் நோக்குடன் அகழ்வு செய்யப்பட்டு வருகின்றது.
அத்துடன் தற்போது அகழ்வு பணியானது மையப்பகுதியை விடுத்து வளாகத்தின் நுழைவு பகுதியிலோயே அதிக கவணம் செலுத்தி தோண்டப்படுகின்றது அத்துடன் இவ்விடத்துக்கு அருகாமையிலுள்ள நடைபாதையில் கடல்மட்டத்தில் இருந்து ஐந்து அடி ஆழத்திற்கு அகழ்வை விரிவுபடுத்திய இடத்திலேயும் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்றும் சந்தோகத்திற்குறிய மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டுள்ளது குறித்த வளாகத்தில் இரு வேறு பகுதிகளில் வித்தியாசமான நிலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது மேற்படி வளாகத்தின் மையப்பகுதியில் எந்த வித குழப்பமும் இன்றி ஒழுங்கான நிலையில் புதைக்கப்பட்ட மனித எச்சங்கள் சிலவும் அதே நேரத்தில் வளாகத்தின் நுழைவு பகுதியில் ஓன்றுடன் ஒன்று செருகிய விதமாகவும் அவசர அவசரமாக புதைக்கபட்ட விதத்திலும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன
தற்போது மையப்பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக அதிக கவணம் செலுத்தப்படவில்லை எனவும் வளாகத்தின் நுழைவு பகுதிகளில் உள்ள மனித எச்சங்கள் தொடர்பாகவே கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வரை குறித்த வளாகத்தில் இருந்து 66 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் 56 மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன இதுவரை மீட்கப்பட்ட 56 மனித எச்சங்களும் 440 பைகளில் இலக்கங்கள் இடப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தின் இவ்வாரத்தில் இரண்டு மோதிரங்கள் தடைய பொருட்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மன்னார் புதைகுழி மனித எச்சங்கள் இதுவரை 440 பைகளில்........
Reviewed by Author
on
August 03, 2018
Rating:

No comments:
Post a Comment