வல்வெட்டித்துறையில் படுகொலை செய்யப்பட்ட 63 அப்பாவி பொது மக்களின் நினைவு தினம் -
இலங்கை - இந்திய ஒப்பந்த காலத்தில் 1989ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 2ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இந்திய அமைதிப்படையினர் தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்திய மிலேச்சத்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் உட்பட 63 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அந்த அனர்த்தத்தின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் வல்வெட்டித்துறையில் ஜனநாயக போராளிகள் கட்சியினர் மற்றும் வல்வை நலன்புரி சங்கத்தினரின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது, இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற படுகொலைகளுக்கான நீதி விசாரணைகளோ நியாயமான இழப்பீடுகளோ இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்திய நடுவண் அரசுகூட தனது இராணுவத்திடம் இப்படுகொலைக்கான உள்ளக விசாரணைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை.
மேலும் தமிழினம் தாம் சந்தித்த பேரிடர்களில் இருந்தெல்லாம் தானாகவே மீண்டெழுந்துள்ளன.
தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அத்தனை வன்கொடுமைகளுக்கும் ஒருநாள் பதில்சொல்லியே ஆகவேண்டும் அதுவரை வீழ்த்தப்பட்ட ஆத்மாக்களின் ஆத்மபலத்தோடு நாம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இப்படுகொலையில் உயிரிழந்தவரின் உறவுகள், மாகாணசபை உறுப்பினர்கள், வல்வை நகரசபை தலைவர், போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
வல்வெட்டித்துறையில் படுகொலை செய்யப்பட்ட 63 அப்பாவி பொது மக்களின் நினைவு தினம் -
Reviewed by Author
on
August 02, 2018
Rating:

No comments:
Post a Comment