அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உயிலங்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு-(படம்)


 மன்னார் உயிலங்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகம் இன்று 02-08-2018 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாகாண விவசாயப்பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தலைமையில் இடம் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசனுடன் இணைந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.ஏ.மோகன்ராஸ் , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக குறித்த பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தினை திறந்து வைத்தனர்.

இதன் போது பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் , உத்தியோகஸ்தர்கள்,நானாட்டான் பிரதேச சபையின் தலைவர்,உப தலைவர், உறுப்பினர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







மன்னார் உயிலங்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு-(படம்) Reviewed by Author on August 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.