கேரளாவுக்கு வாரி வழங்கிய பிரபல தமிழ் நடிகர்:
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ. 1 கோடி வழங்கவுள்ளார்.
வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பல்வேறு நடிகர்கள், நடிகைகள் நிவாரண உதவி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ. 1 கோடியை பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வழங்கவுள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் லாரன்ஸ் பதிவிட்டுள்ளார்.
வரும் சனிக்கிழமை கேரள முதல்வரை சந்தித்து நிதியை அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவுக்கு வாரி வழங்கிய பிரபல தமிழ் நடிகர்:
Reviewed by Author
on
August 24, 2018
Rating:

No comments:
Post a Comment