அண்மைய செய்திகள்

recent
-

குடற்புண்களை குணப்படுத்தும் மணத்தக்காளியின் நன்மைகள் -


நம் முன்னோர்கள் கீரைகளை அதிகம் உட்கொண்டு வந்ததால் தான், அவர்களின் உடல் இன்று வரை மிகவும் வலிமையுடன், எந்த ஒரு நோயும் அவ்வளவு எளிதில் அவர்களை தாக்குவதும் இல்லை.
மணத்தக்காளி கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது. மேலும் 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரோட்டீன் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புக்கள் 2.1% உள்ளது.

மணத்தக்காளி கீரையின் முக்கியமான மருத்துவ குணங்கள்
  • ஒரு நாளைக்கு 5 முதல் 6 பசுமையான மணத்தக்காளி இலைகளை மென்று சாற்றை விழுங்கினால் விரைவாக வாய்புண் குணமாகும்.
  • மணத்தக்காளி கீரையை தினமும் உணவுடன் சேர்த்து உண்பதினால் நம் உடலில் சீரான முறையில் செரிமானம் நடைபெறும்.
  • மணத்த்க்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு அதிகம் உள்ளவர்களின் உடலில் ஏற்படும் சூட்டைக் குறைக்கும்.
  • மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • தொண்டை கரகரப்பு உள்ளவர்களுக்கு வாரம் இரண்டு முறை இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால், தொண்டை கரகரப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
  • காய்ச்சல் வந்தால், கை கால் போன்றவை வலி எடுக்கும். இத்தகைய வலியையும், காய்ச்சலையும் போக்க இந்த கீரையை சாப்பிடுவது சிறந்தது.
  • சருமத்தில் அலர்ஜி, வெயில் கட்டி போன்றவை இருந்தால், அப்போது மணத்தக்காளியின் சாற்றினை பிரச்சனை உள்ள இடத்தில் தடவினால், விரைவில் குணமாகும்.
  • மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், சிறுநீர் சீராக வெளியேறி சிறுநீரகத்தில் கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
  • புதுமணத் தம்பதியர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், கரு வலிமை பெறும். குறிப்பாக பெண்கள் சாப்பிட்டு வந்தால், பிரசவம் எளிமையாக நடைபெறும்.
குடற்புண்களை குணப்படுத்தும் மணத்தக்காளியின் நன்மைகள் - Reviewed by Author on August 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.