மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க அலுவலகம் திறந்து வைப்பு(படம்)
புலனாய்வாளர்களின் அச்சுருத்தலுக்கு மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் அலுவலகம் மன்னாரில் இன்று சனிக்கிழமை 11-08-2018 காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வன்னி இறுதி யுத்தத்தில் கானாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத் தரவேண்டும் அல்லது அதற்கான பொறுப்புகளை அரசு கூறவேண்டும் என்பதற்காக இன்று(11) மன்னார் சாவற்காட்டுப் பகுதியில் குறித்த அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தம் முடிவடைந்த பின் இராணுவ கட்டுபப்பாட்டுப் பகுதிக்குள் வரும் பொழுது முள்ளிவாய்க்கால் பகுதியில் விசாரணைகளுக்காக பெற்றோர் தமது பிள்ளைகளை இரானுவத்தினரிடம் ஒப்படைத்திருந்தனர்.
அப்படி ஒப்படைக்கப்பட்ட பலருக்கு என்ன நடந்தது என்று இன்னும் தெரியாமல்
மனைவி கனவனையும் பெற்றோர் பிள்ளைகளையும் தேடியவாறு அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆனால் இந்த அரசானது கானாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு தீர்வையும் தராமலும் அதற்கான பொருப்பு கூறாமலும் காலத்தை இழுத்தடித்து எமது போராட்டத்தை மறக்கச் செய்யும் செயற்பாடுகளில் முனைப்புக் காட்டி வருகிறது என குற்றம் சாட்டி
அரசின் கபடத்தனத்தை உலகிற்கு காட்டுவதற்காகவும் கானாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதியை விடாப்பிடியாக பெற்றுக்கொள்வதற்காகவும் மக்களால் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டடு
இந்த அலுவலகம் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட் நாளில் இருந்து ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்தபடி இருந்ததாகவும் அதையும் மீறி மக்களுக்காக இந்த அலுவலகத்தை திறந்ததாகவும் ஏற்பாட்டுக்குழுவினர் கூறுகின்றார்கள்.
இறுதி யுத்தத்தில் கானாமல் ஆக்கப்பட்ட மன்னாரில் மட்டும் சுமார் இருநூற்றி ஐம்பதிற்கும் மேட்பட்டவர்களின் குடும்பங்கள் இருந்தபோதும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களினால் சிலர் பங்குபெறவில்லை என்று அறிய முடிகிறது .
பங்குத்தந்தை ஜெயபாலன் அடிகளார் ,வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் ,வடமாகான சபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் , மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரன் டேவிடசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்,மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
குடும்பத்திற்கு வருமானத்தை பெற்றுத்தரும் கனவன் மற்று ஆண் பிள்ளைகளை பறிகொடுத்த பல தாய்மார்கள் உள்ளோம்.
எம்மைச் சாட்டி பலர் பலவகைகளில் நிதிகளைப் பெற்று சுகபோகமாக வாழ்கின்றார்கள்.
எங்களுக்குப் பணம் தேவையில்லை .
எமது பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள் .அல்லது எமது கைகளால் இராணுவத்தினரிடம் ஒப்படைத்த அவர்களுக்கு என்ன நடந்தது என்றாவது கூறுங்கள் என்று கண்ணீர் மல்க பெற்றோர் தெரிவித்தனர்.
இந்த அலுவலகத்திலிருந்து வெளிமாவட்டங்களில் இயங்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் அல்லது அமைப்புகளோடு தொடர்பினைப் ஏற்படுத்தி எமக்கான உரிய தீர்வைப் பெற போராடுவோம் எனஅவர்கள் தெரிவித்தனர்.
மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க அலுவலகம் திறந்து வைப்பு(படம்)
Reviewed by Author
on
August 11, 2018
Rating:
No comments:
Post a Comment