அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாடுகளிலிருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் -


அவுஸ்திரேலியாவில் ஏதிலிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்படும் இலங்கை தமிழர்கள் தொடர்பில் மனித உரிமை அமைப்புக்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.

குறித்த அகதிகளுக்கு இலங்கையில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக இந்த மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அவுஸ்திரேலியாவின் இணையத்தளம் ஒன்று இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தற்போதைய அவுஸ்திரேலிய அரசாங்கம் கடைபிடிக்கும் குடிவரவுக்கொள்கை காரணமாக திருப்பி அனுப்படும் இலங்கை அகதிகள் இலங்கையில் மீண்டும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் திருப்பி அனுப்பப்பட்ட ஞானேஸ்வரன் திலீபன், கடந்த பெப்ரவரியில் திருப்பி அனுப்பப்பட்ட சாந்தரூபன், நாடு கடத்தலுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்- பிரியா குடும்பத்தினர் ஆகியோரின் பெயர்களை இந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் - Reviewed by Author on August 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.