அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ள நிலை! பரீட்சை வினாத்தாளில் எழுத்துப்பிழைகள் -


நாடாளாவிய ரீதியில் இரண்டாம் தவணைப்பரீட்சைகள் இடம்பெற்றுள்ள நிலையில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாம் தவணை தரம் 4 சுற்றாடல் பரீட்சை வினாத்தாளில் எழுத்துப்பிழைகள் காணப்படுவதாக பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தினால் தரம் 4 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சுற்றாடல் பாடத்தின் இரண்டாம் தவணைப்பரீட்சை வினாத்தாளிலேயே இவ்வாறு எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றது.
வினாத்தாள்கள் அச்சிடுவதற்கு முன்னர் பரிசீலனை மேற்கொள்ளப்படவில்லை என்பதை இது எடுத்துக்காட்டியுள்ளது.

கல்வியலாளர்களை அதிகமாக உள்ளீர்த்து தமிழ்ப்பாடங்களை மாணவர்களுக்கு தவறாக வழிநடத்தப்படுவது கண்டறியப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இவற்றை திருத்தி மாணவர்களுக்கு சரியான சொற்களை வழங்கவேண்டிய பொறுப்பு தமிழர்கள் அதிகமுள்ள கல்வி வலயங்களையே சாரும்.
கடந்த காலங்களிலும் இவ்வாறான பிழைகளுடன் பரீட்சை வினாத்தாள்கள் வெளிவந்துள்ளபோதிலும் இவற்றைத்திருத்தி மாணவர்களுக்கு சரியான கல்வி நடவடிக்கை எவையும் ஆக்கபூர்வமாக மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழிக்கு ஏற்பட்டுள்ள நிலை! பரீட்சை வினாத்தாளில் எழுத்துப்பிழைகள் - Reviewed by Author on August 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.