வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள உறுதி -
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்காவின் துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நேற்று சந்தித்துள்ளார்.
இதன்போதே குறித்த வாக்குறுதி வழங்கப்பட்டதாக அமெரிக்க துணைத்தூதுவர் தமது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். குறித்த டுவிட்டர் பதிவில் மேலும்,
'ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 30/1 (2015) மற்றும் 34/1 (2017) தீர்மானங்களின் கீழ், இலங்கை தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்தக்கடப்பாடுகள், அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளுடனான இலங்கையின் உறவுகளை விரிவுபடுத்துவதற்கு வசதியாக இருக்கும்' என்று அமெரிக்க பதில் தூதுவர் கூறியுள்ளார்.
வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள உறுதி -
Reviewed by Author
on
August 01, 2018
Rating:

No comments:
Post a Comment