2.0,இந்தியன் 2 பட இயக்குனருக்கு நீதிமன்றம் விதித்த அபராதம்!
ரஜினி காந்த், கமல் ஹாசன் பல இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார்கள். அதில் அவர்களை வைத்து பிரம்மாண்ட படத்தை கொடுத்தவர் இயக்குனர் சங்கர்.
ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை இயக்கியுள்ளார். படம் தள்ளிப்போனாலும் படத்தின் இறுதிகட்ட தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அதே வேளையில் கமல் ஹாசன் நடிக்க இருக்கும் இந்தியன் 2 படத்தில் வேலைகளில் சங்கர் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் ரஜினியை வைத்து எடுத்த எந்திரன் படம் 2010 ல் வெளியாகி வெற்றி பெற்றது. ஆனால் எழுத்தாளர் ஆரூர் தமிழ் நாடன் என்பவர் அப்படத்தின் கதை என்னுடையது.
எனவே எனக்கு சங்கர் ரூ 1 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் அவரை நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் சங்கர் வராததால் நீதிமன்றம் அவருக்கு ரூ 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
2.0,இந்தியன் 2 பட இயக்குனருக்கு நீதிமன்றம் விதித்த அபராதம்!
Reviewed by Author
on
September 04, 2018
Rating:

No comments:
Post a Comment