வெளிநாடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கையர்
சைப்ரஸ் நாட்டில் மர்மமான முறையில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சைப்ரஸ் - Limassol பகுதியில் நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றள்ளதாக அந்தப் பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
45 வயதான இலங்கையர் ஒருவர் தான் தங்கியிருந்த வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் காயமடைந்த நிலையில் நபர் ஒருவர் உள்ளார் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு அம்பியுலன்ஸ் ஒன்றை அனுப்பி வைத்த போதிலும், குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான நிலையில் தலையில் பாரிய காயங்களுடன் குறித்த நபர் காணப்பட்டதாக ஆரம்பக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் Limassol பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கையர்
Reviewed by Author
on
September 05, 2018
Rating:

No comments:
Post a Comment