முருங்கன் பகுதியிலும் தனியார் காணிகள் விடுவிப்பு......
வடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் பாவனைக்காக சுமார் 87 ஏக்கர்களை விடுவிக்க நேற்று முன்தினம் புதன் கிழமை(17) அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
இந் நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை புதைகுழி பகுதியின் அருகில் அமைந்திருந்த இராணுவத்தின் வசம் காணப்பட்ட 5 ஏக்கர் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவித்ததை போன்று முருங்கன் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த இரானுவமுகாம் நேற்றைய தினம்(18) (4ஏக்கர் காணிகளை) அகற்றப்பட்டுள்ளது
இந்த இரானுவமுகாம் கடந்த 2006ம் ஆண்டளவில் முருங்கன் பகுதியில் அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக 12 வருடங்கள் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த நிலையில் நேற்றைய தினம் முற்று முழுதாக அகற்றப்பட்டு மக்களுடைய பாவனைக்காக
வழங்கப்பட்டுள்ளது .
குறித்த முருங்கன் இராணுவ முகாமை அகற்ற கோரி பல்வேறு தடவைகள் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மக்களால் முன் மொழிவுகள் முன்வைக்கப்பட்டது குறிப்பிட தக்கது.
முருங்கன் பகுதியிலும் தனியார் காணிகள் விடுவிப்பு......
Reviewed by Author
on
October 19, 2018
Rating:
No comments:
Post a Comment