அண்மைய செய்திகள்

recent
-

மைத்திரி-மகிந்தவுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மற்றுமொரு சர்வதேச பிரபலம்! -


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டால் ஜனாநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், போர்குற்றங்களுடன் தொடர்புடைய மகிந்த ராஜபக்சவை, மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பதிவில்அவர் கூறியுள்ளதாவது,

“இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது. அவர், பொறுப்புக்கூறலுக்கு உறுதியளித்தார்.
எனினும், தற்போது, போர்க்குற்றங்கள், காணாமல் ஆக்கப்படுதலுக்கு பொறுப்பான மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளார்.
அவசர இராஜதந்திரம் தேவை – இலங்கையர்கள் இதனை கையாள வேண்டும். பெருமளவு இரத்தம் சிந்தப்பட்டுள்ளதால் பின்நோக்கித் திரும்ப முடியாது” என அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையை தொடர்ந்து நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ள நிலையில, சமந்தா பவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மைத்திரி-மகிந்தவுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மற்றுமொரு சர்வதேச பிரபலம்! - Reviewed by Author on October 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.