அண்மைய செய்திகள்

recent
-

கருணா வெளியே சுகபோகம் அனுபவிக்க, தமிழ் அரசியல் கைதிகளுக்கு மட்டும் இந்த நிலையா? -


தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் இலங்கை அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் ஆதரவளிக்ககூடாது என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் இன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இன்றைய கலந்துரையாடலின்போது 29 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாகவும், அவர்களுடைய உடல்நிலை தொடர்பாகவும் பேசியுள்ளோம்.

இதனடிப்படையில் அவர்களை விடுதலை செய்வதற்கும், அவர்களுடைய உயிர்களை காப்பாற்றுவதற்கும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்திருக்கிறோம்.
அந்த வகையில் சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். குறிப்பாக இன்று சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கு ஆணைவழங்கியவர்கள் உதாரணமாக கருணா போன்றவர்கள் வெளியே சுகபோகம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் நிலையில் ஆணையை ஏற்று நடவடிக்கையில் இறங்கியவர்களுக்கு மட்டும் தண்டணை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலாகும்.

மேலும் இலங்கை அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான பாதீடு நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் பாதீட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். இல்லையேல் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கான நிபந்தனைகளை விதிக்கவேண்டும்.
இதனை பாதீடுசமர்பிக்கப் படுவதற்கு முன்னர் அரசாங்கத்திற்கும், அரசாங்கத்தில் உள்ள முக்கிய அரசியல் வாதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் கூறவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
கருணா வெளியே சுகபோகம் அனுபவிக்க, தமிழ் அரசியல் கைதிகளுக்கு மட்டும் இந்த நிலையா? - Reviewed by Author on October 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.