கூட்டமைப்பை ஏமாற்றிய ரணில் - மகிந்த! ஜே.வி..பி விடுத்துள்ள அழைப்பு -
மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமான “தி இந்துவிற்கு” வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஐக்கிய தேசிய கட்சியும், மகிந்த ராஜபக்ச தரப்பினரும் சர்வதேசமூகத்திற்கு காண்பிப்பதற்காகவும், தங்கள் பலத்தை காண்பிப்பதற்காகவும் தமிழ்தேசிய கூட்டமைப்பினை பயன்படுத்தியுள்ளனர்.
இரு கட்சிகளின் தலைவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. அவர்கள் தங்கள் நலனிற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை பயன்படுத்தினார்கள்.
இந்நிலையில், வடக்கிலும், தெற்கிலும் ஒடுக்குமுறை அரசாங்கங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினரை மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதித்துவம் செய்கின்றன.
ஆகையினால், ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக இணைந்து போராடவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது. இரு கட்சிகளும் கொள்கையின் அடிப்படையில் பணியாற்றுகின்றன.
எனவே, அவ்வாறான அணுகுமுறையை கொண்டுள்ள இந்த இரு கட்சிகளும் இணைந்து பணியாற்ற முடியும். சில விடயங்கள் தொடர்பில் எங்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன.
எனினும், எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்ற முடியும். மக்கள் விடுதலை முன்னணியிடம் இரகசிய நிகழ்ச்சிநிரல் இல்லை. அதேபோல் தமிழ்தேசிய கூட்டமைப்பிடமும் அவ்வாறான இரகசிய நிகழ்ச்சி நிரல் இல்லை.
இவ்வாறான வெளிப்படை தன்மை காணப்படுவதால் ஒருவருக்கு மற்றையவரின் நிலைப்பாடு தெரியும். எனவே நாங்கள் சிறப்பாக இணைந்து செயற்பட முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பை ஏமாற்றிய ரணில் - மகிந்த! ஜே.வி..பி விடுத்துள்ள அழைப்பு -
Reviewed by Author
on
November 23, 2018
Rating:
Reviewed by Author
on
November 23, 2018
Rating:


No comments:
Post a Comment