அண்மைய செய்திகள்

recent
-

ரூ 160 கோடியை செலுத்தாவிட்டால்...இந்திய கிரிக்கெட்டுக்கு ஐசிசி விடுத்த எச்சரிக்கை -


டிசம்பர் 31-ம் திகதிக்குள் நிலுவைத் தொகையான ரூபாய் 160 கோடியைச் செலுத்தாவிட்டால், 2023-ம் ஆண்டு உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பு வழங்கப்படாது என்று பிசிசிஐ-க்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2016-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்ற போது, போட்டிகளை ஒளிபரப்ப இந்திய அரசாங்கம் வரிச்சலுகை எதுவும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் போட்டியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வரிகள் அனைத்தையும் கழித்துக்கொண்டு மீதி தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் வழங்கியது.

இந்த நிலையில் நிலுவை தொகை 160 கோடி ரூபாயை வரும் 31-ஆம் திகதிக்குள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ செலுத்தவேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

ரூ 160 கோடியை செலுத்தாவிட்டால்...இந்திய கிரிக்கெட்டுக்கு ஐசிசி விடுத்த எச்சரிக்கை - Reviewed by Author on December 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.