குஞ்சுக்குளத்தில் தேக்கம் சுற்றுலா மையம் இயங்கவுள்ளதாக- தி.பரஞ்சோதி தெரிவிப்பு
குஞ்சுக்குளத்தில் இயங்காமல் இருந்த தேக்கம் சுற்றுலா மையம் இயங்கவுள்ளதாக நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி.பரஞ்சோதி தெரிவிப்பு.
கடந்த 2014ம் வருடம் வடமாகான சபை சுற்றுலா அமைச்சினால் ஓதுக்கப்பட்ட பண்ணிரெண்டு மில்லியன் ரூபா செலவில் குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் சுற்றுலா மையம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது
2016 முன்னைய பிரதேச சபையின் நிர்வாகத்தினரால் தனியாருக்கு சுற்றுலா மையம் ஐந்து வருட குத்தகைக்கு விடப்பட்டிருந்தது ஆனால் தொடர்ந்தும் பாவிக்கப்படாமல் இருந்தமையால் கட்டிடங்கள் கூரைகள் சேதமடைந்து காணப்பட்டது
இந்த வருடம் புதிய சபை நிர்வாகம் பொறுப்பேற்றவுடன் சுற்றுலா மையத்தை குத்தகைக்கு எடுத்தவர்களிடம் சுற்றுலா மையத்தை திறக்காமைக்கான காரணம் கேட்டபோது
சுற்றுலா மையத்திற்கான பூரண வசதிகள் இல்லாமையால் திறக்க வில்லை என்னும் காரணம் கூறப்பட்டது
ஆனால் அனைத்து வசதிகளும் அங்கு செய்யப்பட்டிருந்தது
இது பற்றி சபை அமர்வுகளிலும் ஆராயப்பட்டு கடந்த பத்தொன்பதாம் திகதி கூட்டத் தீர்மானத்தினபடி அவர்களுக்கு கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து வருகின்றவருடம் தை மாதம் அளவில் திறந்த கேள்வி மூலம் குறித்த குஞ்சுக்குளம் சுற்றுலா மையத்தை குத்தகைக்கு விட தீர்மாணித்துள்ளதாக தவிசாளர் தி.பரஞ்சோதி அவர்கள் தெரிவித்தார்.
குஞ்சுக்குளத்தில் தேக்கம் சுற்றுலா மையம் இயங்கவுள்ளதாக- தி.பரஞ்சோதி தெரிவிப்பு
Reviewed by Author
on
December 25, 2018
Rating:

No comments:
Post a Comment