அண்மைய செய்திகள்

recent
-

மானிட சமூகம் மிகப்பெரும் சவால்களுக்கு மத்தியிலே இன்று கிறிஸ்து பிறப்பு விழா- மெதடிஸ்த திருச்சபை அருட்பணி.கந்தையா ஜெகதாஸ் அடிகளார்

இன்றய சூழலில் மானிட சமுகம் எதிர் கொள்ளும் மிகப்பெரும் சவால்களாக
வன்முறைக்கும் கலாச்சார பிறல்வு பண்பாட்டு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் காணமலாக்கப்படா உறவுகளுக்கு தமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் குடும்பங்கள் தொடர் ஏமாற்றுதலாக உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை போதப் பொருள் பாவனை என்பவற்றால் தடுமாறிக் கொண்டிருக்கும் இளம் சமுகம் சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் துன்புறுத்தல்கள் கொலைகள் நாழுக்குநாள் அதிகரித்துச் செல்கின்ற சூழலிலேயே கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் கொண்டாடுகின்றோம் என இலங்கை மெதடிஸ்த திருச்சபை மன்னார் பொறுப்புக்குரு அருட்பணி.கந்தையா ஜெகதாஸ் அடிகளார் தனது கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அனைத்து மக்களிற்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்துக்களும் இறைஆசிகளும்
உரித்தகட்டும். உலகனைத்தினதும் மனுக்குல விடுதலைக்காக ஆண்டவர் இயேசு மண்ணிலே மனுவுருவான வரலாற்றுப் பேருண்மையினை நாம் கிறிஸ்து பிறப்பு நத்தார் நிகழ்வாக நினைவு கூருகிறோம்.

 இறைசாயலிலே படைக்கப்பட்ட மனுக்குலம் தீமையின் பிடிக்குள்
ஆட்கொள்ளப்பட்டு துன்புற்றபோது தீமையும் கொடுங்கோன்மையும்
தலைவிரித்தாடியபோது மனுக்குலத்தினை விடுவிக்க கடவுள் மனிதனாக வந்த அதி உன்னத நிகழ்வே கிறிஸ்து பிறப்பு அதாவது கடவுள் மானிடரை தேடிவந்தது மனிடராக பிறந்தது தன்னை ஈகம் செய்து மனுக்குலத்ததை தீமையின் பிடியில் இருந்து விடுவிப்பதற்றகாகும்.

மேற்படி கிறிஸ்துவின் பிறப்பினை அறிவித்த இறை தூதர் 'அஞ்சாதீர்கள் இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன் இன்று ஆண்டவராகிய மேசியா எனும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்'(லூக்கா.2:10)என இறைமகன் இயேசுவின் பிறப்பின் உன்னத நோக்கத்தினை சிறப்பாக எடுத்தியம்புகிறார்.

இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பலஸ்தீனா நாட்டிலே ஆண்டவர் இயேசு பிறந்தபோது பலவிதாமன அச்சமும் அடிமைத்தனமும் இருளும் மக்களைச் சூழ்ந்திருந்தது ரோமபப் பேரரசின் ஆக்கிரமிப்பின் அடிமைத்தனம் மதவாதிகளின் ஒடுக்குதல் பல்வேறு சமுகம்சார் பகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் கோலோச்சிய சூழல். இப்படிப்பட்ட சூழலிலே இறைமகனின் பிறப்பு நிகழ்ந்தது

அன்று மக்களை ஆக்கிரமித்து இருந்த தீமையினையும ;வன்முறையினையும்
கொடுங்கோன்மையினையும் அகிம்சை நீதி அன்பு மன்னிப்பு சமாதானம் ஒப்புரவாதல் என்கின்ற உயரிய விழுமியங்களால் தகர்த்து மனுக்குலத்தினை விடுதலையாக்கி மானிடமான்பினை அளித்து வாழவைப்பதே இப் பிறப்பின் நோக்கமாகும்

தீமையினை தீமையினால் அல்ல மாறாக தீமையினை நன்மையினால் வெல்லவேண்டும்
வன்முறைக்கு மாற்றீடாக அகிம்சையினையும் போருக்கு மாற்றீடாக
சமாதானத்தினையும் உலகிற்கு அறிமுகம் செய்துவைத்து. புதிய மானுட
கலாச்சாரத்தினை ஆரம்பித்து வைத்தார். அவ்வழி முறையினையும் நாமும்
பின்பற்ற அழைக்கப்படுகின்றோம்.

எழுபதாண்டுகள் தொடர்ச்சியான ஓடுக்குமுறைச் சூழலிலும் முப்பதாண்டுகள்
கொடியபோரின் கொடுந்துன்பத்தாலும் ஒன்பதாண்டுகளுக்கு முன்னார் இன்
நூற்றான்டின் உலகின் மிகப்பெரிய இன அழிப்பைச் சந்தித்தும் அதற்குப்
பின்னர் தற்போதுவரை கட்டமைக்கப்பட்ட இன அழிப்பபைச்
சந்தித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழினம் வரலாற்றுச் சுற்றோட்டத்தில்
தொடர்ந்தும் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கிறது

 இன்றய சூழலில் மானிட சமுகம் எதிர் கொள்ளும் மிகப்பெரும் சவால்களாக
வன்முறைக்கும் கலாச்சார பிறல்வு பண்பாட்டு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் காணமலாக்கப்படா உறவுகளுக்கு தமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் குடும்பங்கள் தொடர் ஏமாற்றுதலாக உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை போதப் பொருள் பாவனை என்பவற்றால் தடுமாறிக் கொண்டிருக்கும் இளம் சமுகம் சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் துன்புறுத்தல்கள் கொலைகள் நாழுக்குநாள் அதிகரித்துச் செல்கின்ற சூழல்

 வியாபார மயமாகிவிட்ட கல்வி மீளெர்ச்சியடைந்துவரும் மதவாதமும்
சாதியமும்.எமது சூழலில் மனுக்குலம் எதிர் கொள்ளும் சவால்களாகும்

எனவே இறைமகனின் பிறப்பினை எதிர்கொள்ளுகின்ற நாம் மேற்குறிப்பிட்ட
தீமையினதும் கொடுங்கோன்மையினதும் பிடியில் இருந்து மனுக்குலத்தினை விடுவிக்க ஆண்டவர் இயேசுவின் பாதையில் செயற்பட அழைக்கப்படுகின்றோம் அப்போதுதான் கிறிஸ்து பிறப்பின் உயிருள்ள சாட்சிகளாகவும் அர்த்தமுள்ள நத்தாரையும் நாம் உண்மையாக அனுபவிக்கமுடியும் என இலங்கை மெதடிஸ் திருச்சபை மன்னார் பொறுப்புக்குரு அருட்பணி.கந்தையா ஜெகதாஸ் அடிகளார்
தனது கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



மானிட சமூகம் மிகப்பெரும் சவால்களுக்கு மத்தியிலே இன்று கிறிஸ்து பிறப்பு விழா- மெதடிஸ்த திருச்சபை அருட்பணி.கந்தையா ஜெகதாஸ் அடிகளார் Reviewed by Author on December 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.