இன்றைய கால நிலை! யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை -
வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்றைய கால நிலை தொடர்பில் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைப்பெய்யக் கூடும்
மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை நேரங்களில் பனி மூட்டம் நிறைந்த காலநிலை எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழைபெய்யும் போது சற்று பலத்த காற்று வீசக்கூடும்.
இதனிடையே, மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்து கொள்ள பொது மக்கள் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கால நிலை! யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை -
Reviewed by Author
on
December 25, 2018
Rating:
Reviewed by Author
on
December 25, 2018
Rating:


No comments:
Post a Comment