அண்மைய செய்திகள்

recent
-

கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தி- அருட்திரு.தமிழ் நேசன் அடிகளார்

உலகில் சந்திப்புக்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.மலர் மணத்தைச் சந்திக்கின்றது. வானம் நிலவைச் சந்திக்கின்றது. நிலம் நீரைச் சந்திக்கின்றது. கடல் கரையைச் சந்திக்கின்றது. இவை எல்லாம் அழகான சந்திப்புக்கள்தான். ஆனால் இவை எல்லாவற்றையும்விட அற்புதமான அதிசயமான ஒரு சந்திப்பு வரலாற்றில் நடைபெற்றது. அதுதான் விண்ணகம் மண்ணகத்தைச் சந்தித்தது! கடவுள் மனிதனைச் சந்தித்தது! கடவுள் இந்த மண்ணில் மனிதனாக மலர்ந்தது! இதைத்தான் கிறிஸ்மஸ் விழாவாக நாம் ஆண்டுதோறும் கொண்டாடுகின்றோம்.

மனித வாழ்வில் சந்திப்புக்கள் பலவிதம். சில சந்திப்புக்கள் சந்தோசத்தைக் கொடுக்கின்றன. சில சந்திப்புக்கள் சங்கடங்களை ஏற்படுத்துகின்றன. கடவுள் மனிதனைச் சந்தித்ததை திருவிவிலியம் “பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி” என்று குறிப்பிடுகின்றது. வானதூதர்கள் இடையர்களுக்குக் கூறும் வார்த்தையில்  நாம் இதனைக் காண்கின்றோம்.“இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்” (லூக். 2: 10-11).

கடவுள் மனிதனைச் சந்தித்த இந்த அற்புதமான விழா நமக்கு ஓர் ஆழமானää அழுத்தமான செய்தியைத் தருகின்றது. அதாவது நாமும் மற்றவர்களைச் சந்திக்க வேண்டும். தேவையில் இருக்கும் மனிதர்களை நோயில் முதுமையில் தனிமையில் இருக்கும் மனிதர்களை நாம் சந்திக்க வேண்டும். இத்தகைய சந்திப்புக்களை நாம் மேற்கொள்ளும்போது சக மனிதர்கள் வாழ்வில் நாம் மகிழ்வை  புன்னகையை ஏற்;படுத்துகின்றோம். அதன்வழியாக நாமும் மகிழ்ச்சியடைகின்றோம்ää மனநிறைவு பெறுகின்றோம்.



கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தி- அருட்திரு.தமிழ் நேசன் அடிகளார் Reviewed by Author on December 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.