மன்னார் இளைஞர்கள்-கிளிநொச்சி,முல்லைத்தீவு மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு-
வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் மன்னார் மாவட்டத்தில் நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணியில் இளைஞர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று காலை குறித்த நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தன்னார்வம் மிக்க இளையோர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த பணியில் பல தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவினை வழங்கி வருகின்றனர்.
மேலும் மன்னார் நகரப்பகுதியில் குறித்த குழுவினர் நிவாரண பணியில் ஈடுபட்டு வருகின்ற போது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பணம் வர்த்தகர்களினால் வழங்கப்பட்டு வருகின்றது.
25ற்கும் அதிகமான பொதிகளும்(அங்கர்-நூடில்ஸ்-பிஸ்கட் வகைகள்-இதர உலருணவுகள் போர்வைகள் நல்ல ஆடைகள்)
பணமாக இதுவரை 31870 ரூபா சேகரிக்கப்பட்டுள்ளது
- இன்றும் 25-12-2018
- நாளையும் 26-12-2018
சேகரிக்கப்பட்ட பொருட்களுடன் குறித்த குழுவினர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக தமது உதவிகளை கையளிக்கவுள்ளனர்.
*தொகுப்பு -வை.கஜேந்திரன் -
மன்னார் இளைஞர்கள்-கிளிநொச்சி,முல்லைத்தீவு மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு-
Reviewed by Author
on
December 25, 2018
Rating:

No comments:
Post a Comment