அண்மைய செய்திகள்

  
-

மன்னாரில் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி-கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்களுக்காக....படங்கள்


வடமாகாணத்தில் எற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு காரணமாக அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக முல்லைதீவு கிளிநொசிசி மாவட்டங்கள் அதிகளவில் பதிக்கப்பட்டுள்ளது

குறித்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை சேகரிக்கும் பணிகள் தற்போது மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வருகின்றது
தன்னார்வம் மிக்க இளையோர்களால் நேற்றும் இன்றும் மன்னார் பொது விளையாட்டு அரங்கில் நிவாராண பொருட்களை சேகரிக்கும் வேலைகள் இடம் பெற்று வருகின்றது அத்துடன் இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்ககர்களிடம் நிவரண பொருட்கள் சேகரிக்க திட்டம் இடப்பட்டுள்ளது

நிவாரண பொருட்கள் சேகரிக்கும் வேலைக்கு மன்னார் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மனமுவந்து தந்துதவுமாறும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் மற்றும் மன்னார் நகரசபை தலைவர் உட்பட அனைத்து அங்கத்தினரும் கோரிக்கை விட்டுத்துள்ளனர்

சேகரிக்கப்பட்ட பொருட்களுடன் உதவிகுழு ஒன்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வெகு விரைவில் செல்ல இருப்பது குறிப்பிட தக்கது.



மன்னாரில் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி-கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்களுக்காக....படங்கள் Reviewed by Author on December 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.