இலங்கையின் ஹஜ் கோட்டாவை 2500 இல் இருந்து 3500ஆக உயர்த்துவதற்கு தீர்மானம் -
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளுக்கு அமைய சவூதி அரேபியா அரசாங்கம் இலங்கையின் ஹஜ் கோட்டாவை 2500 இல் இருந்து 3500 ஆக உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சவூதி நாட்டு தூதுவர் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி பிரதேசத்திற்கு வருகை தந்தபோதே இன்று குறித்த தீர்மானத்தை தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கு இதுவரை காலமும் 2500 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 13000 பேர் ஹஜ் செல்ல விண்ணப்பித்திருந்தும் ஹஜ் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.
இந் நிலையை கருத்திற்கொண்டு இரண்டு வார காலமே முஸ்லிம் சமய கலாசார அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பொறுப்பேற்றவுடன் உடனடியாக சவூதி அரபியே அரசாங்கத்தின் இலங்கைகான தூதுவர் அஷ்ஷேய்க் நாசர் அல்ஹாலித்துடன் இணைந்து முஸ்லிம் சமய கலாசார ஆலோசகர் ராபிததுல் ஆலமி அல் இஸ்லாமி செயலாளர் ஈஸாயி , சவூதி இளவரசர் முக்ரின் உட்பட பல தரப்பினர்களோடு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அத்தோடு 2500 கோட்டாவை ஆக குறைந்தது 1000ஆக அதிகரித்து 3500 தர வேண்டும் என்ற வேண்டுகோள் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இதனை பரீசிலித்த சவுதி அரசு இலங்கையின் ஹஜ் கோட்டாவை 3500 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பான உடன்படிக்கையை கைச்சாத்திடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் சவுதி தூதுவர் காத்தான்குடிக்கு விஜயம் செய்த போதே உத்தியோகபூர்வமாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரிடம் வினவிய போது,
இரண்டு வாரம் காலம் இந்த அமைச்சை பொறுப்பேற்று 1000ஆக அதிகரிக்க வேண்டும் என்ற எனது முயற்சி வெற்றியளித்துள்ளது. அதற்காக நாம் பெருமையடைகிறேன், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன் என ஆளுநர் இதன் போது தெரிவித்திருந்தார்.
இலங்கையின் ஹஜ் கோட்டாவை 2500 இல் இருந்து 3500ஆக உயர்த்துவதற்கு தீர்மானம் -
Reviewed by Author
on
January 23, 2019
Rating:

No comments:
Post a Comment