புதிய தலைமைத்துவத்திற்கு பொருத்தமானவர்கள் யார்? -
வடகிழக்கில் கூட்டமைப்பை விட வேறு தலைமைகள் இருந்தால், அது யார் என்று காட்டுங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா சாம்பல்தோட்டம் மலைமகள் கிராமத்தில் அவரது நிதியில் அமைக்கபட்ட கட்டடம் ஒன்றை இன்றையதினம் திறந்து வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வுடன், கலை, கலாசார மதம் சார்ந்த விடயங்களின் பாதுகாப்பு, அபிவிருத்தி, வேலைவாய்பு போன்ற பலவிடயங்கள் தேவையாக இருக்கிறது. இன்று அபிவிருத்தியை எதிர்பார்த்து எமது மக்கள் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். அது ஆபத்தான விடயம்.
அண்மையில் பிரதமருடனான சந்திப்பில் பல அபிவிருத்தி விடயங்கள் பற்றி பேசபட்டது. அதனை முடித்துவிட்டு பிரதமர் எழுந்து செல்ல முற்பட்டார்.
அதன்போது, தொல் பொருட்திணைக்களம் ஒரு மதத்தில் மாத்திரம் கரிசனை கொள்வதுடன் ஏனைய மதங்களை அழிக்கும் நோக்கில் செயற்படுகின்றது. குறிப்பாக வவுனியா, முல்லைதீவு மாவட்டங்களில் அதன் செயற்பாட்டை அவதானிக்க முடியும். அதற்கு எவ்வாறான தீர்மானம் எடுக்கலாம் என்று பிரதமரை கேட்டிருந்தேன்.
அதனை பிறகு கதைக்கலாம் என்று பிரதமர் கூறியிருந்தார். அப்படியானால் நான் வெளியில் செல்கின்றேன் என்று நான் எழும்பி சென்றேன். இதன்போது என்ன செய்ய வேண்டும் கூறுங்கள் என்று அவர் என்னை அழைத்து கேட்டார்.
வவுனியா வெடுக்குநாரிமலை, குருந்தூர் மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயம் என்பன இந்துக்களின் பூர்விக பிரதேசங்கள் அங்கு இந்துக்களின் அடையாளங்களை அழித்து பௌத்த சின்னங்களை நிறுவும் செயற்பாட்டிற்கு தொல்பொருட்திணைக்களம் உடந்தையாக இருக்கிறது என தெரிவித்திருந்தேன். இவ்விடயம் தொடர்பாக தொல்பொருட்திணைக்களத்தின் பதிலை பிரதமர் கொரியிருந்தார்.
அதற்கமைய தொல்பொருட்திணைக்களத்தின் பணிப்பாளரால் இவ்விடயங்கள் தொடர்பான அறிக்கை பிரதமருக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளது.
அவ் அறிக்கையில் வெடுக்குநாரிமலை நீராவியடிபிள்ளையார் கோவில் என்பன இந்துக்களின் பூர்வீகமான வழிபாட்டு பிரதேசங்கள் இல்லை. பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் உண்மைக்கு புறம்பான குற்றசாட்டை தெரிவித்து மக்களை ஏமாற்றுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.
அதன்பிரதி எனக்கும் அனுப்பபட்டுள்ளது. இது தொடர்பாக நானும் ஒரு தெளிவான அறிக்கையை அவர்களுக்கு அனுப்பவுள்ளேன்.
இவ்வாறான விடயங்களை கூட்டமைப்பு மாத்திரமே தற்போது கதைத்து வருகின்றது. வன்னியின் மூன்று மாவட்டங்களும் தற்போது அச்சுறுத்தல்களிற்கு உள்ளாகியுள்ளது.
ஒன்று பௌத்தமயமாக்கல் மற்றயது தமிழர்களின் காணிகளை முஸ்லீம் அமைச்சர்கள் தமது மக்களுக்கு வழங்குவது இப்படியான பாதிப்புகள் இருப்பது தெரிந்தும் நாம் ஒற்றுமையாகவில்லை. இவ்விடயங்கள் தொடர்பாக கூட்டமைப்பு ஆராய்ந்து வருகிறது.
தமிழ்கூட்டமைப்பை பொறுத்த வரை மக்களிற்கு துரோகம் செய்து அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கில்லை.
எமக்குள் பல பிரச்சினை இருந்தாலும் ஒற்றுமையை கைவிடகூடாது. இன்று புதியகட்சி பற்றியும் , புதிய தலைமைத்துவம் பற்றியும் பலர் பேசுகிறார்கள் வடகிழக்கில் கூட்டமைப்பை விட வேறு தலைமைகள் இருக்கிறதா அப்படியானால் அது யார் என்று கேள்வியும் எழுப்பியிருந்தார்.
நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்கதலைவர் வியரூபன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் முன்னாள் வடமாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெற்குபிரதேச சபை உறுப்பினர்களான பூ.சந்திரபத்மன், சுப்பிரமணியம், தமிழசுகட்சியின் இளைஞரணி தலைவர் பா.சிந்துயன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
புதிய தலைமைத்துவத்திற்கு பொருத்தமானவர்கள் யார்? -
Reviewed by Author
on
January 28, 2019
Rating:

No comments:
Post a Comment