தலைமன்னாரில் 912 கிலோ பீடிசுற்றும் இலைகளுடன் இருவர் கைது-(படம்)
தலை மன்னார் வெளிச்ச வீட்டிற்கு, 5 கடல் மைல் தொலைவில் ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகள் கொண்ட பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு,சந்தேக நபர்கள் இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
27 மூடைகளில் பொதியிடப்பட்டு 912 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
27 மூடைகளில் பொதியிடப்பட்டு, கண்ணாடியிலைப் படகொன்றில் இவை இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டபோதே இன்று வியாழக்கிழமை (21) அதிகாலை கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
-கைது செய்யப்பட்ட இருவர் மன்னார் பேசாலையைச் சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட பீடி சுற்றும் இலைகளையும் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
27 மூடைகளில் பொதியிடப்பட்டு 912 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
27 மூடைகளில் பொதியிடப்பட்டு, கண்ணாடியிலைப் படகொன்றில் இவை இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டபோதே இன்று வியாழக்கிழமை (21) அதிகாலை கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
-கைது செய்யப்பட்ட இருவர் மன்னார் பேசாலையைச் சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட பீடி சுற்றும் இலைகளையும் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னாரில் 912 கிலோ பீடிசுற்றும் இலைகளுடன் இருவர் கைது-(படம்)
Reviewed by Author
on
March 21, 2019
Rating:

No comments:
Post a Comment